மனிதர்களில் இரண்டே விதம் தான். ஒன்று மாட்டிக் கொண்டவர்கள். மற்றொன்று இதுவரை மாட்டாமல் தவறு செய்து கொண்டிருப்பவர்கள்…
:
மாட்டிக்கொண்டவன் கெட்டவனாக சித்தரிக்கப்படுகிறான்.. மாட்டாமல் தவறு செய்பவன் நல்லவனாக அலங்கரிக்கப்படுகிறான்….
:
இதில் என்ன கொடுமை என்றால், மாட்டாமல் தவறு செய்பவன் மாட்டிக் கொண்டவனை குற்றம் சொல்லித் திரிவது தான் இங்கு பெரும்பாலும் நடைபெறுகிறது…..
:
தன் தவறுகளை மறைத்து, பிறர் செய்த தவறுகளை குறையாக சொல்லி, அதை தனக்குத் தெரிந்த அத்தனை மனிதர்களிடமும் சொல்லி தான் ஏதோ உத்தமன் போல நடந்து கொள்கிறார்கள்

உண்மையில் நல்லது கெட்டது என்று எப்படி வரையறுக்கப்படுகிறது… அவரவர் மனநிலையை பொறுத்து வரையறுக்கப்படுகிறது….

Leave a Reply